27 Sept 2009

நீ - நான்

கவிதைகள்
ததும்பி நிரம்பிய
கருவூலமாய் ,
நடமாடும் பொக்கிஷம் - நீ

ரசனையற்ற
பார்வை கொண்ட,
வர்ணிக்க வார்த்தையற்ற
கற்சிலை யாய் - நான்

-கார்த்திக்.வெ.

மழை. . .

வாசல் வரை
என்னை நாடி வரும்
நண்பனை வரவேற்க
வீதி வரை சென்றேன்!
கையில் குடையேஇன்றி. . .
முகத்தில் புன்னகை பூ பூக்க . . .

அவன் தூவும்
புன்னகை மலரில் நனைந்தேன்!
என் துக்கம் மறந்து. . .

-கார்த்திக்.வெ.