14 Aug 2010

சுதந்திர தினம்?

ஆகஸ்ட் பதினான்கு
மாலை மூன்று மணியளவில்,
மக்கள் கூட்டம்
பரவலாக அலைமோதும்
வடபழனி பேருந்து நிலையத்தில்...

மனிதனை மிருகத்திட மிருந்து வேறுபடுத்தும் ,
உடை, உறைவிடம் கூட இன்றி
தவிக்கும் நாடோடி மனிதர்களிடம்...

நான்கு சக்கர குளிர் வாகனத்தில்
ஊர்ந்து வந்த காவலர்,
இரத்தத்தில் ஊறிப்போன
லத்தியால் துரத்தப்படும் கும்பல்
செல்லும் திசை யறியாமல் சிதறி
விரட்டி யடிக்கப் பட்டனர்...
ஓழுங்கு நடைமுறை திட்டத்தின் கீழ்....

காரணம் ?
நாளை சுதந்திர தினமாம் !

வாழ்க ஜனநாயகம் !