29 Jul 2009

பிறந்தநாள் வாழ்த்து!

பூக்கும்
மொட்டுக யெல்லாம்
மலர துடிக்கின்றன,
அழகிய
இந்நன் நாளில்...

மலர்ந்த மலர்கள்,
மலரை பாதுகாக்கும்
முட்களுக்கு
அறிமுகம் இல்லையென்றாலும்
மலரின் வாசம்
முட்களை தீண்டி செல்லும்!

அதுபோல,
நீ
மலர்ந்த இந்நன் நாள்
என்னைத் தேடி...

அறிமுக மில்லா
தோழியின் பிறந்த
நாளன்று,
அறிமுகம் காட்ட
மனம் உருகி வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்!

இனிய
பிறந்த நாள் வாழ்துக்கள்!

-கார்த்திக்.வெ.

23 Jul 2009

எதிர்காலம்?

என்
கையெழுத்தை
சீர் படுத்த முடிந்த
என்னால்...

என்
தலை யெழுத்தை
சீர் படுத்த
தவறி விட்டேனே!

-கார்த்திக்.வெ.

21 -ம் வயது

கருந்திராட்சை
போன்ற அவள்
கயல் போன்ற
விழியை
அபகரித்து ருசிக்க
நினைக்கிறது....

என்
செவ்விதழ்கள்!

விலை மதிப்பில்லா
பொக்கிஷங்களை
காக்கும்
காவலர்கள் போல,
அம்பு போன்ற
கூறிய முனை யுடைய
அவள்
கண் இமை,
புருவம்
என்னும் வில்லின்
உதவியால்

என்
செவ்விதழ்களை
கிழித்து
காயப்படுத்தி விடுமோ
என்ற அச்சத்தில்
என்

மனம் ஒரு
அடி பின்னே
செல்கிறது...
-கார்த்திக்.வெ.

மயக்கம்!

இயற்கையின்
மடியில் கிடந்தது
தவழ்ந்த
அதனை ரசித்த
எனக்கு....

அவள்
அழகில் மயங்கிய தன்
காரணம் அறியோம்!

அவள்
சுவாசித்த
மூச்சுக் காற்றை
நான்
சுவாசித்த தால்
என்னவோ!
-கார்த்திக்.வெ.

22 Jul 2009

நகர வாழ்க்கை?

பூக்களின்
மகரந்த தேனை
சேகரிக்கும்
தேனீக்களைப் போல

சுகமாய்
இயற்கையை
ரசித்து ருசிக்கும்
இளமைப் பருவத்தில்...

தான் கண்ட
கனவுகளை
புறம் தள்ள தூண்டியது
குடும்ப வறுமையை...

மனிதன்
தன் வளத்தை
மேம்படுத்த
சென்னை மா'நகரம்
தேடி வரும்
இளைஞர்களாய்...

ஒவ்வொரு
பூவிலிருந்தும்
தேன் துளியை
சேகரிக்கிறான்...
ஆனால்,
அங்கு
வாடகை என்னும்
பெயரில்
உறிஞ்சி எடுப்பது
துளித் துளியாய்
நம்மில்
சேர்த்து வைத்த
தேன் துளிகள் தான்...

இதற்கிடையே
சாதி மதம்
மண்டி கிடக்கும்
தூர் வாரமுடியாத
மனங்களினூடே
ஓர் போராட்டம்
தூர் வார வேண்டி...

ஆனால்
வாரியது
தாங்கள் நின்ற
இடத்தை மட்டுமே...

கிடைத்த வீட்டில்
பல நாட்கள் ஓட!
இறுதியில்
நெப்பந்தஸ்
என்னும் பூக்களினூடே
மாட்டிக் கொண்ட
தேனீக்களாய்
மடிகிறது
மனித வாழ்க்கை....

-கார்த்திக்.வெ.