பூக்களின்
மகரந்த தேனை
சேகரிக்கும்
தேனீக்களைப் போல
சுகமாய்
இயற்கையை
ரசித்து ருசிக்கும்
இளமைப் பருவத்தில்...
தான் கண்ட
கனவுகளை
புறம் தள்ள தூண்டியது
குடும்ப வறுமையை...
மனிதன்
தன் வளத்தை
மேம்படுத்த
சென்னை மா'நகரம்
தேடி வரும்
இளைஞர்களாய்...
ஒவ்வொரு
பூவிலிருந்தும்
தேன் துளியை
சேகரிக்கிறான்...
ஆனால்,
அங்கு
வாடகை என்னும்
பெயரில்
உறிஞ்சி எடுப்பது
துளித் துளியாய்
நம்மில்
சேர்த்து வைத்த
தேன் துளிகள் தான்...
இதற்கிடையே
சாதி மதம்
மண்டி கிடக்கும்
தூர் வாரமுடியாத
மனங்களினூடே
ஓர் போராட்டம்
தூர் வார வேண்டி...
ஆனால்
வாரியது
தாங்கள் நின்ற
இடத்தை மட்டுமே...
கிடைத்த வீட்டில்
பல நாட்கள் ஓட!
இறுதியில்
நெப்பந்தஸ்
என்னும் பூக்களினூடே
மாட்டிக் கொண்ட
தேனீக்களாய்
மடிகிறது
மனித வாழ்க்கை....
-கார்த்திக்.வெ.
22 Jul 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment