23 Jul 2009

எதிர்காலம்?

என்
கையெழுத்தை
சீர் படுத்த முடிந்த
என்னால்...

என்
தலை யெழுத்தை
சீர் படுத்த
தவறி விட்டேனே!

-கார்த்திக்.வெ.

21 -ம் வயது

கருந்திராட்சை
போன்ற அவள்
கயல் போன்ற
விழியை
அபகரித்து ருசிக்க
நினைக்கிறது....

என்
செவ்விதழ்கள்!

விலை மதிப்பில்லா
பொக்கிஷங்களை
காக்கும்
காவலர்கள் போல,
அம்பு போன்ற
கூறிய முனை யுடைய
அவள்
கண் இமை,
புருவம்
என்னும் வில்லின்
உதவியால்

என்
செவ்விதழ்களை
கிழித்து
காயப்படுத்தி விடுமோ
என்ற அச்சத்தில்
என்

மனம் ஒரு
அடி பின்னே
செல்கிறது...
-கார்த்திக்.வெ.

மயக்கம்!

இயற்கையின்
மடியில் கிடந்தது
தவழ்ந்த
அதனை ரசித்த
எனக்கு....

அவள்
அழகில் மயங்கிய தன்
காரணம் அறியோம்!

அவள்
சுவாசித்த
மூச்சுக் காற்றை
நான்
சுவாசித்த தால்
என்னவோ!
-கார்த்திக்.வெ.