கருந்திராட்சை
போன்ற அவள்
கயல் போன்ற
விழியை
அபகரித்து ருசிக்க
நினைக்கிறது....
என்
செவ்விதழ்கள்!
விலை மதிப்பில்லா
பொக்கிஷங்களை
காக்கும்
காவலர்கள் போல,
அம்பு போன்ற
கூறிய முனை யுடைய
அவள்
கண் இமை,
புருவம்
என்னும் வில்லின்
உதவியால்
என்
செவ்விதழ்களை
கிழித்து
காயப்படுத்தி விடுமோ
என்ற அச்சத்தில்
என்
மனம் ஒரு
அடி பின்னே
செல்கிறது...
-கார்த்திக்.வெ.
23 Jul 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment