15 Aug 2010

நான் - நகரம்

கிராமத்து மழைச் சாரலில் நனைந்து
மண்ணின் நாற்றத்தில் மலர்ந்து
மணம் வீச...
நகர் நோக்கி!

அகத்திலிருந்து சிரித்தேன்
அறியாமை யென்றார்கள்.
புறமுகம் மட்டும் சிரித்தேன்
புன்னகை பூ யென்றார்கள்...

14 Aug 2010

சுதந்திர தினம்?

ஆகஸ்ட் பதினான்கு
மாலை மூன்று மணியளவில்,
மக்கள் கூட்டம்
பரவலாக அலைமோதும்
வடபழனி பேருந்து நிலையத்தில்...

மனிதனை மிருகத்திட மிருந்து வேறுபடுத்தும் ,
உடை, உறைவிடம் கூட இன்றி
தவிக்கும் நாடோடி மனிதர்களிடம்...

நான்கு சக்கர குளிர் வாகனத்தில்
ஊர்ந்து வந்த காவலர்,
இரத்தத்தில் ஊறிப்போன
லத்தியால் துரத்தப்படும் கும்பல்
செல்லும் திசை யறியாமல் சிதறி
விரட்டி யடிக்கப் பட்டனர்...
ஓழுங்கு நடைமுறை திட்டத்தின் கீழ்....

காரணம் ?
நாளை சுதந்திர தினமாம் !

வாழ்க ஜனநாயகம் !