4 Aug 2011

இதய திருடி....

உனது விழித்திரையில்
எனது பிம்பம் பதிக்க
கள்வனானேன். . .
உன் இதயம் திருடி!

இறுதியில் களவு போனது
என் இதயம் !
உன்னை அறியாமலேயே
நீ திருடியதால். . .

இருந்தபோதும்
இறுதிவரை தெரியவில்லை!
நான் யாரென்று உனக்கு. . .

-- கார்த்திக்.வெ

3 Apr 2011

பூந்தோட்டம் . . .





உனக்காக!
நான் சேகரித்த மலர்கள்
ஒருங்கிணைந்து, பூந்தோட்டம் ஆனதோ...

உனக்கு!
அர்ப்பணிக்க தவறியதால்...

-கார்த்திக்.வெ