5 Oct 2009

ஒரு தலை பூ. . .

அன்பே!
என் மனதில்
விதை தூவி,
செடி வளர்ந்து,
மலர்கள்
மலர ஆரம்பித்து விட்டன. . .
உன் நினைவாக!

இம் மலரின் நாற்றத்தை
நீ
அறிவது எப்பொழுது. . .

என்
தோட்டத்து மலரை
நீ சூடுவாய் யென்று. . .

உதிராமல் உனக்காக
மணம் வீசிக் கொண்டு யிருக்கிறேன்...
உன்
வருகையை எதிர்நோக்கி. . .
இப்படிக்கு,

-கார்த்திக்.வெ.

2 Oct 2009

இறுதி தினம். . .

பூக்கும்
பூக்கள் ஓரிடம் என்றாலும் ,
பூவின் வாசம்
உலகெங்கும் மணமாய். . .

நம்
வசிப்பிடம் வேறு என்றாலும்,
நம் நினைவுகள்
என்றும் ஒருங்கிணைந்த சங்கமமாய். . .

நட்புடன் என்றும். . .

-கார்த்திக்.வெ.

27 Sept 2009

நீ - நான்

கவிதைகள்
ததும்பி நிரம்பிய
கருவூலமாய் ,
நடமாடும் பொக்கிஷம் - நீ

ரசனையற்ற
பார்வை கொண்ட,
வர்ணிக்க வார்த்தையற்ற
கற்சிலை யாய் - நான்

-கார்த்திக்.வெ.

மழை. . .

வாசல் வரை
என்னை நாடி வரும்
நண்பனை வரவேற்க
வீதி வரை சென்றேன்!
கையில் குடையேஇன்றி. . .
முகத்தில் புன்னகை பூ பூக்க . . .

அவன் தூவும்
புன்னகை மலரில் நனைந்தேன்!
என் துக்கம் மறந்து. . .

-கார்த்திக்.வெ.

10 Sept 2009

அழகுச் சிறை!

கருமையும்
அழகு யென்று
உணர்ந்தேன்!
அவள்
கண்ணின் கருவிழியை
பார்க்கும் பொழுது...

அவள்
கண் சிறையில்
இருப்பதால் யென்னவோ!
இவ்வுலகம்
எனக்கு
இருளாக காட்சி யழிக்கிறது!

-கார்த்திக்.வெ.

மாற்றம் ?

இளவேநீர்
காலமாய் பூத்து குலுங்கிய
நம் நட்பு...

அவள்
அருகில் இருக்கும்
பொழுது மட்டும்
இலையுதிர் காலமாய்
மாறியது யேன்?
என்
இனிய நண்பனே!

எதிர்நோக்கும் மாற்றம்
நட்பில் அல்ல...

-கார்த்திக்.வெ.

3 Sept 2009

நினைவுச் சின்னம்!



அதிகாலை
உதயமாகும் சூரியன் கூட
ஒரு நாள்
உதயமாகாமல் போகலாம்...

பூக்க துடிக்கும்
மொட்டுக்கள் கூட
பூக்காமல் போகலாம்...

மலர்ந்த மலர்களும் கூட
வாசம் வீசாமல் போகலாம்...

காதலின் சின்னமாக கருதப்படும்
தாஜ்மஹால் கூட
காலப் போக்கில்
அழிந்து போகலாம்...

அந்தி மாலையில்
தோன்றும் வானவில் கூட
ஒளிராமல் போகலாம்...

ஆனால்
நான் உன் மீது கொண்ட
அன்பு மட்டும்
ஒருபோதும் அழியப் போவதில்லை!

நான் மடிந்தாலும்
என் நினைவு
என்றும் உன்னைச் சுற்றியே!
காதலின் சின்னமாக...


-கார்த்திக்.வெ

29 Jul 2009

பிறந்தநாள் வாழ்த்து!

பூக்கும்
மொட்டுக யெல்லாம்
மலர துடிக்கின்றன,
அழகிய
இந்நன் நாளில்...

மலர்ந்த மலர்கள்,
மலரை பாதுகாக்கும்
முட்களுக்கு
அறிமுகம் இல்லையென்றாலும்
மலரின் வாசம்
முட்களை தீண்டி செல்லும்!

அதுபோல,
நீ
மலர்ந்த இந்நன் நாள்
என்னைத் தேடி...

அறிமுக மில்லா
தோழியின் பிறந்த
நாளன்று,
அறிமுகம் காட்ட
மனம் உருகி வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்!

இனிய
பிறந்த நாள் வாழ்துக்கள்!

-கார்த்திக்.வெ.

23 Jul 2009

எதிர்காலம்?

என்
கையெழுத்தை
சீர் படுத்த முடிந்த
என்னால்...

என்
தலை யெழுத்தை
சீர் படுத்த
தவறி விட்டேனே!

-கார்த்திக்.வெ.

21 -ம் வயது

கருந்திராட்சை
போன்ற அவள்
கயல் போன்ற
விழியை
அபகரித்து ருசிக்க
நினைக்கிறது....

என்
செவ்விதழ்கள்!

விலை மதிப்பில்லா
பொக்கிஷங்களை
காக்கும்
காவலர்கள் போல,
அம்பு போன்ற
கூறிய முனை யுடைய
அவள்
கண் இமை,
புருவம்
என்னும் வில்லின்
உதவியால்

என்
செவ்விதழ்களை
கிழித்து
காயப்படுத்தி விடுமோ
என்ற அச்சத்தில்
என்

மனம் ஒரு
அடி பின்னே
செல்கிறது...
-கார்த்திக்.வெ.

மயக்கம்!

இயற்கையின்
மடியில் கிடந்தது
தவழ்ந்த
அதனை ரசித்த
எனக்கு....

அவள்
அழகில் மயங்கிய தன்
காரணம் அறியோம்!

அவள்
சுவாசித்த
மூச்சுக் காற்றை
நான்
சுவாசித்த தால்
என்னவோ!
-கார்த்திக்.வெ.

22 Jul 2009

நகர வாழ்க்கை?

பூக்களின்
மகரந்த தேனை
சேகரிக்கும்
தேனீக்களைப் போல

சுகமாய்
இயற்கையை
ரசித்து ருசிக்கும்
இளமைப் பருவத்தில்...

தான் கண்ட
கனவுகளை
புறம் தள்ள தூண்டியது
குடும்ப வறுமையை...

மனிதன்
தன் வளத்தை
மேம்படுத்த
சென்னை மா'நகரம்
தேடி வரும்
இளைஞர்களாய்...

ஒவ்வொரு
பூவிலிருந்தும்
தேன் துளியை
சேகரிக்கிறான்...
ஆனால்,
அங்கு
வாடகை என்னும்
பெயரில்
உறிஞ்சி எடுப்பது
துளித் துளியாய்
நம்மில்
சேர்த்து வைத்த
தேன் துளிகள் தான்...

இதற்கிடையே
சாதி மதம்
மண்டி கிடக்கும்
தூர் வாரமுடியாத
மனங்களினூடே
ஓர் போராட்டம்
தூர் வார வேண்டி...

ஆனால்
வாரியது
தாங்கள் நின்ற
இடத்தை மட்டுமே...

கிடைத்த வீட்டில்
பல நாட்கள் ஓட!
இறுதியில்
நெப்பந்தஸ்
என்னும் பூக்களினூடே
மாட்டிக் கொண்ட
தேனீக்களாய்
மடிகிறது
மனித வாழ்க்கை....

-கார்த்திக்.வெ.

6 May 2009

கருவிழிச் சிறை!

அவள்
கண்ணின் கருவிழிக்குள்
சிறைப்பட்ட
என்னால் சிறகடித்து பறக்க
முடியவில்லை...
சிறகொடிந்து கிடக்கிறேன்!

என்னை
சிறைப்படுத்திய
கண்ணின் மீது
எனக்கு
கோபம் இல்லை...
ஆனால்,
தாகம் உண்டு !
அவள்
கண்ணின் கருணைப்
பார்வைக்காக...

அவள்
கண்ணைப்
பார்த்த எனக்கு
அவள்
சரீரத்தை பார்க்க
மனம் வரவில்லை...
காரணம்?
என்
உயிர் மீது உள்ள
பயம்!

இக்கவிதைகுச் சொந்தமான
அவளிடம் கூட
இக்கவிதையை
சொல்ல தயக்கம் ..!
இருவருக்குமிடையில்
ஊடல் பிறந்து
விடுமோ என்று ...
பிறந்தால்
என்
வாழ்நாள் முழுவதும்
அவள்
கண் சிறையில்தான் ...

குயிலும்
கவி பாடும் ...
காகமும்
காதல் கவிதை இசைக்கும் ...
அவள்
கண்ணின்
கருவிழியை வர்ணிக்கும்
பொழுது...

-கார்த்திக்.வெ

கானல் நதி!

முல்லைக்கு
தேர் கொடுத்தான் பாரி...

ஆனால்,
அந்த முல்லைக்கு
நறுமணம் கிடைத்தது உன்னால்!
நீ
அதனை சூட்டியதால்...

தென்றலும்
உன்னிடம் அனுமதி கேட்கும்,
உன்
கூந்தலை தீண்டி
உன்
கூந்தலின் நறுமணத்தை
இவ்வுலகிற்கு பரப்பிட...

கடற்கரையில்
நீ நடந்து
செல்லும் பொழுது
கடல் வாழ் உயிரினங்கள்
கண்டு வியக்கும்!
இதுதான்
நதியோ யென்று!

உன்
கூந்தல்முடி
ஒவ்வொன்றும்
முடிவில்லா கவிதை
வரிகள்....

இக்கவிதை வரிகளை
முடிக்க மனமின்றி
முடிக்கிறேன்...
தயக்கத்துடன்!

-கார்த்திக்.வெ