6 May 2009

கானல் நதி!

முல்லைக்கு
தேர் கொடுத்தான் பாரி...

ஆனால்,
அந்த முல்லைக்கு
நறுமணம் கிடைத்தது உன்னால்!
நீ
அதனை சூட்டியதால்...

தென்றலும்
உன்னிடம் அனுமதி கேட்கும்,
உன்
கூந்தலை தீண்டி
உன்
கூந்தலின் நறுமணத்தை
இவ்வுலகிற்கு பரப்பிட...

கடற்கரையில்
நீ நடந்து
செல்லும் பொழுது
கடல் வாழ் உயிரினங்கள்
கண்டு வியக்கும்!
இதுதான்
நதியோ யென்று!

உன்
கூந்தல்முடி
ஒவ்வொன்றும்
முடிவில்லா கவிதை
வரிகள்....

இக்கவிதை வரிகளை
முடிக்க மனமின்றி
முடிக்கிறேன்...
தயக்கத்துடன்!

-கார்த்திக்.வெ

No comments: